Show all

ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் உலக தரத்தில் இந்தியா

ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் உலக தரத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் நிறுவனம் ஒன்று ஒரு நாட்டில் நடக்கும் ஆட்கடத்தல், பணம் பறித்தல், தனி நபருக்கு எதிரான காப்பீட்டுத் திட்டம் இவைகளைக் கணக்கெடுத்து அறிவித்துள்ளது.

அதன்படி உலக தர வரிசையில் ஆட்கடத்தல், பணம் பறித்தலில் மெக்சிகோ முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் 3வது இடத்திலும்,ஈராக் 4 வது இடத்திலும் உள்ளன.

நைஜீரியா, லிபியா முறையே 5ம் 6ம் இடத்தில் உள்ளன என்பதுக் குறிப்பிடத் தக்கது. தனி நபருக்கு எதிரான காப்பீட்டுத் திட்டத்தில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.