Show all

நேபாள நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் இன்று நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் இன்று காலை அங்குள்ள காஸ்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கடும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலச்சரிவின் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 22 வீடுகள் சேதமடைந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லஷ்மி தகால் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கிய பலரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அங்கு மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.