Show all

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசுக்கு நடுவண்

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு நடுவண் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்த நிலையில் , அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து இருந்தது. ஆனால் இதை எதிர்த்து அப்போதைய மத்திய அரசு மனுத் தாக்கல் செய்த நிலையில், இப்போதைய மத்திய அரசும் அதே எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.

மத்திய அரசின் இந்த மனு இன்று விசாரனைக்கு வந்த நிலையில், சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது என்றும், ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு செய்த நிலையில் அவர்களை விடுதலையும் செய்தால் இரட்டிப்பு சலுகை வழங்கியது போலாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை வைத்து தமிழக அரசு அரசியல் லாபம் தேடப்பார்க்கிறது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற செவ்வாய்க் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.