Show all

டெல்லியில் அப்துல்கலாம் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 4 மணிக்கு மேல் பொதுமக்கள் அஞ்சலி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

கலாமின் உடலுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் அமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் ராஜாஜி மார்க் இல்லத்தில் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாது முன்னாள் கிரிக்கெட்வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களும் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.