Show all

சத்தமில்லாமல் உதவி செய்கிற சிவகார்த்திகேயன்

சத்தமில்லாமல் உதவி செய்கிற தமிழ் சினிமா ஹீரோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

‘உதவியா? எங்க பாடே ததிங்கிணத்தோமா இருக்கு, இதுல இவங்க வேற’ என்கிற தமிழ்த் திரைப்பட ஹீரோக்கள் நிறைய பேர்கள்.இவர்களுக்கு நடுவில் சிவகார்த்திகேயனோ வேறுபட்டவராக, சமீபத்தில் பெற்றவர்களையும், பாதுகாவலர்களையும் திடீரென பறிகொடுத்த ஒரு என்ஜினியரிங் மாணவி திக்கற்று நின்ற தகவல் ஒரு பத்திரிகையாளர் மூலமாக சிவகார்த்திகேயன் காதுக்கு சென்றது. சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு நேரடியாக ஆள் அனுப்பியவர் இன்னும் வரப்போகும் இரண்டு ஆண்டு கட்டணத்தொகையையும் கட்டிவிட்டு திரும்ப உத்தரவிட்டார்.

தம்பட்டம் அடித்துக் கொள்ள அவர் விரும்பாவிட்டாலும், தார்மீக ரீதியில் போகிற இடமெல்லாம் சொல்லி பெருமை பூக்கிறார் நிருபர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.