Show all

பிரதமர் மோடியை கொல்ல சதி - உளவுத்துறை எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி நாளை பீகார் மாநிலம் செல்கிறார். அங்கு பாட்னா மற்றும் முசாபர்நகரில் நடைபெறும் இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில், மோடி பாட்னா அல்லது முசாப்பர்பூர் பயணத்தின் போது அவர் மீது மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், உஷாராக இருக்குமாறு மாநில போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு குழுவினரிடம் மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளதாக பீகார் மாநில போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பிரதமரின் பயணம் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர், போலீஸ் அதிகாரி, எலக்ட்ரீசியன், தொழிலாளர் வேஷத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.