Show all

பொதுமக்கள் பயன் படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப் பாட்டுக்கருவி

பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை ஏன் பொருத்தக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவது குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். எந்த வாகனங்களுக்கு கருவி பொருத்தலாம் என மாநில அரசுகள் கண்டறிய வேண்டும்'' எனக் கூறினார்.இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''எந்த வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தலாம் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். புதிய வாகனங்களுக்கும் கருவி பொருத்துவது பற்றி வரும் 28ஆம் தேதி பதிலளிக்கிறோம்'' என்றார்.

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, ''பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் வேகத்தின் அளவை நிர்ணயிக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தாததால்தான் அதிக உயிரிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி ஏன் பொருத்தக்கூடாது?'' என கேள்வி எழுப்பினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.