ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள சென்ற, ஜார்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டு அமைச்சர் நீரா யாதவ், அங்கிருந்த அப்துல் கலாம் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய சம்பவம் சமூக வலைத் தளங்களில் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ மனிஷ் ஜெய்ஸ்வால் மற்றும் பள்ளி ஆசிரியர் உமேஷ் பிரசாத் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்,ஆயினும் இவர்கள் யாரும் நீரா யாதவின் இந்த செயலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.உயிருடன் நலமாக இருக்கும் ஒருவருக்கு பொட்டு வைத்து மாலை அணிவிப்பது பெரும் கண்டனத்துக்கு உரியதாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.