Show all

முல்லைப்பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு தர கேரளா முடிவு

முல்லைப்பெரியாறு அணையை பாதுகாப்புக்கு 124 காவலர்களை ஈடுபடுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இன்று முதலமைச்சர் உம்மண் சாண்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தற்போது வரை 22 காவலர்களை முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியில் கேரள அரசு ஈடுபடுத்திவருகிறது,

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் கேரள அரசு இந்த முடிவு எடுத்துள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.