Show all

சென்னை போரூர் ஏரியில் மண் கொட்டும் விவகாரம் விசாரணை 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு

போரூரில் உள்ள ஏரியில் மண் கொட்டப்பட்டு ஏரியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதை தடுக்கக்கோரி வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வு நீதிபதிகள் ஜோதிமணி, ராவ் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொதுப்பணித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சலீம், ஏரியில் சாலை அமைக்கும் பணி எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும், ஏரியை பலப்படுத்துவதற்காக மண் கொட்டுப்படுவதாக தெரிவித்தார்.இதை தங்களால் நிரூபிக்க முடியும் எனவும், இது குறித்து வரும் 30ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் வாதடினார்.

அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அதுவரை ஏரியில் மண்ணை கொடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கும் என்றும் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.