Show all

ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை பாதுகாப்புக்கு 2000 காவலர்கள் குவிப்பு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. இதையடுத்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில், ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

இன்று மாலை, சுமார் 4 மணிக்கு கூட்டம் தொடங்கி 6 மணிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பொதுக்கூட்டத்திற்கு முன்பாக விமான நிலையம் அருகில் தனியார் பண்ணை வீட்டில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை ராகுல் சந்தித்து பேசுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை மற்றும் ராகுல் விவசாயிகளை சந்திக்கும் இடம் ஆகியவை, மத்திய சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கு, 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழகப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.