Show all

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு

ஈவ்டீசிங் புகார் தெரிவித்த டெல்லியைச் சேரந்த 19 வயது மாணவி மீனாட்சியை, ஆனந்த் பர்பத் பகுதியில், கடந்த 16ம் தேதி இரவு, இரண்டு இளைஞர்கள் 35 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.

இந்த விவகாரத்தில், காவல்துறையின் மெத்தனப்போக்கால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் கெஜ்ரிவால், காவல்துறையை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதன்தொடர்ச்சியாக, முதலமைச்சர் கெஜ்ரிவாலை, டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸி நேற்று சந்தித்துப்பேசினார்.

இந்நிலையில், இவ்விவகாரத்தில், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் ஆனந்த் பர்பாத் காவல்நிலையத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டத்தை கலைக்க, போலீசார் தடியடி நடத்தியதால், பதற்றம் ஏற்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.