Show all

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 2014 செப்., 23ம் தேதி, அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன் பின், முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தபோது, அவரது தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது.

பத்து மாத இடைவெளிக்கு பிறகு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடந்தது.பகல், 12:52 மணிக்கு துவங்கிய கூட்டம், 20 நிமிடத்தில் நிறைவு பெற்றது.கூட்டத்தில், மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்த சட்டசபையை கூட்டுவது, செப்டம்பரில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை சிறப்பாக நடத்துவது, ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை தாண்டி முதலீட்டை ஈர்ப்பது உட்பட, பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.