Show all

பஞ்சாப் அமைச்சர் மீது சீக்கியர்கள் செருப்பு வீச்சு

பஞ்சாப் மாநிலத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறை மந்திரியாக இருப்பவர் டோட்டா சிங். இவர் ஒரு தூதுக்குழுவினருடன் அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று முன்தினம் இவர் அங்கு குயின்ஸ்பாரோ என்ற இடத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேச இருந்தார். ஆனால் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் அங்கு திரண்டனர்.

அவர்கள் மந்திரி டோட்டா சிங் மீதும், தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்த சிரோமணி அகாலிதள தலைவர்கள் மீதும் செருப்புக்களையும், கற்களையும் வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு நியூயார்க் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.அதேநேரத்தில் டோட்டா சிங்கையும், மற்ற தலைவர்களையும் போலீசார் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக 2 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.