Show all

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பெண்கள் பலி

டெல்லியில் உள்ள காயலா என்ற இடத்தில் விஷ்ணு கார்டன் என்ற வளாகத்தில் இருந்த 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்றனர்.தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் போலீசார் ஆகியோரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இடிபாடுகளில் 15 முதல் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.