பீகார் சாப்ரா மாவட்டத்தில் உள்ள சிக்தி கஞ்சா கிராமத்தில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த சிலர் வயிற்றுவலியால் அவதிப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 10 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளச்சாராய கடை உரிமையாளரான ஜோகேந்திரா சவுத்ரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.