Show all

ஸ்பைஸ்ஜெட்டின் புதிய சலுகை ரூ.1 ல் விமானத்தில் பறக்கலாம்

நேற்று(15.07.2015) காலை பத்து மணிக்கு தொடங்கிய இந்த சலுகையின் கீழ் ஒரு லட்சம் இருக்கைகளுக்கான பயணச்சீட்டு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பெஸ்ஜெட்டின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்த முடியும். நேற்று தொடங்கிய இச்சலுகை மூன்று நாட்கள் ஜுலை 17,2015 நள்ளிரவு வரை தொடரும். இதன்படி ஜுலை 15ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை உள்ள விமானங்களில் பயணச்சீட்டு பதிவு செய்யலாம். இந்த சலுகை உள்ளநாட்டு விமானப் பயணங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இரண்டு வழித்தடங்களுக்கான பயணச்சீட்டு கண்டிப்பாக வாங்கப் பட வேண்டும். இதில் முதல் வழிப் பயணத்திற்கு மட்டுமே ஒரு ரூபாய் கட்டணமென்றும், மற்ற பயணத்திற்கு சதாரண கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.