பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வெளியிட்டுள்ள ஒரு டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு சுப்பிரமணியன் சுவாமி இந்த டிவிட்டை வெளியிட்டுள்ளார். அதில்,ஜெயலலிதா கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின், மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் நகரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர வாய்ப்புள்ளது.
எந்த நேரத்திலும் ஜெயலலிதா கிளம்பலாம். அது ஒரு கடினமான ஆபரேசன் என்று தெரிவித்துள்ளார். அதிமுக தரப்பிலோ, முதல்வர் தரப்பிலோ, ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் இத்தகவல் நம்பகத்தன்மை உள்ளதுதானா என்ற சந்தேகம் உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.