அவசரநிலை கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று அக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.வின் மூத்த தலைவரான எல்.கே அத்வானி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவசரநிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்ய முடியாது என்று கூற முடியாது. அதற்கான சூழல் உள்ளது என்று அத்வானி குறிப்பிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சல்மான் குர்ஷித் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.