Show all

டெல்லியில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

டெல்லியின் மகிபல்பூர், ஸ்ரீ ஆரோபிந்தோ மார்க், கலந்தி குஞ்ச், ஐடிஓ ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் மழை காரணமாக, லாஜ்பத் நகர், டிஃபன்ஸ் காலனி , பஞ்சாபி பாக் , சீலம்பூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை நிலவரப்படி டெல்லியில் 93.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களிலும் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.