புலி படத்தின் டீஸரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே அது இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்ட மிதுன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் படத்தின் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே இணையத்தில் வெளியானது. அதனை செய்தது யார் என்று கண்டுபிடிக்க படத்தின் தயாரிப்பாளர்கள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், புலி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.