கர்நாடகத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சித்ரதுர்கா, கொப்பல், உப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், மைசூருவில் 2 பேரும் என 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் துமகூருவில் தற்கொலைக்கு முயன்ற மற்றொரு விவசாயி, ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.