Show all

டி.டி மெடிக்கல் காலேஜ் பிரசிடென்ட் அரஸ்ட்

சென்னை அருகே திருத்தணியில் தீனதயாள் மெடிக்கல் காலேஜ் மற்றும் கல்வி அறக்கட்டளை உள்ளது; இதன் தலைவர் டி.டி.நாயுடு. இவர் ஆந்திரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 135 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

கடனுக்கு ஈடாக, இவர் கொடுத்த ஆவணங்கள் போலியானது என வங்கிகளின் சரிபார்ப்பின் போது தெரிய வந்தது. இதையடுத்து நாயுடு மீது வங்கி நிர்வாகங்கள் புகார் கொடுத்தன.

புகாரை அமலாக்கப் பிரிவினர் விசாரித்த போது மனைவி மற்றும் வாரிசுகள் பெயர்களில் கடன் பெற்று அவர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.