Show all

தலைக்கவசப் பயன்பாடு உளவுத்துறை சேகரிப்பு

சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுப்படி இருசக்கர வாகனமோட்டிகள் தலைக்கவசம் அணிவது சூலை1 முதல் கட்டாயம் என்று நடவடக்கை எடுக்கப் பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 300இடங்களுக்கு மேல் 300க்குமேற்பட்ட துணை ஆய்வாளர்களை ஈடுபடுத்தி தலைக்கவசம் அணியாத வாகனமோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதுவரை 3664 பேர்களிடம் ஆவணங்களும் 2036பேர்களிடம் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

தலைக்கவசப் பயன்பாட்டை முறைப் படுத்துதலில் உள்ள குறைபாடுகள் 1.பொதுமக்களுக்கு பாதிப்பு 2.நீதிமன்ற உத்தரவை காவல்துறையால் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்கிற கோணத்தில் உளவுத்துறை தகவல் சேகரித்து வருகிறது. எதிர்கால நடவடிக்கை அதனடிப்படையில் முறைப் படுத்தப்படும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.