Show all

ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவி

மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய சாதனை படைத்த தமிழக மாணவி சாருஸ்ரீ கூறி்னார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்களுக்கான 2014 ஆம் ஆண்டிற்கான தேர்வு இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வு முடிவுகளில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது.கோவையை சேர்ந்த சாருஸ்ரீ யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.