Show all

விம்பிள்டன் டென்னிஸ் :

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. அதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் போப்பண்ணா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்தியாவின் ரோகன் போப்பண்ணா ரோமானியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி பிரேசிலின் பெல்லுக்சி, அர்ஜென்டினாவின் துரன் ஜோடியும் விளையாடியது. இதில் போப்பண்ணா ஜோடி 7-5, 7-6, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்த ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மகேஷ்பூபதி, செர்பியாவின் ஜன்கோ திப்சரிவிச் ஜோடி 3-6, 3-6, 2-6 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் மெல்சர், ஸ்வீடனின் லிண்ட்ஸ்டட் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.