Show all

சப்பையாகி விட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி! வெறுப்பில் பார்வையாளர்கள் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு தூங்கப் போய்விடுகிறார்கள்

தர்சன் வெளியேற்றப் படலத்தில் உண்மை குழிதோண்டி புதைக்கப் பட்டு விட்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் குமுறுகிறார்கள். மேலும் சப்பையாகி விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி! வெறுப்பில் பார்வையாளர்கள் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு தூங்கப் போய்விடுகிறார்கள். இதையே வனிதாவும் வழிமொழிகிறார்.


16,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை கீச்சுவில் விளாசித் தள்ளிவிட்டு தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக சென்றுள்ளார் வனிதா விஜயகுமார்.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சிக்கு என்ன ஆனது என்றே எனக்கு புரியவில்லை. இரண்டு கிழமைகளாக ஒரு வேலைப்போட்டியும் கிடையாது, சும்மா சாப்பிட, சொகுசாக இருக்க, பாட்டு பாட என்று போய்க் கொண்டிருக்கிறது. விருந்தாளிகள் வருகிறார்கள், அவர்களும் பாட்டு பாடி, நடனம் ஆடி கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் அதிருப்தியாக உள்ளது. இப்படித் தான் பிக் பாஸ் தலைப்பு வெற்றியாளரைத் தேர்வு செய்கிறார்களா? அது மட்டுமில்லாமல், ஓட்டு போடுவதில் எல்லாம் மோசடி. வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களுக்கு நியாயம் இல்லை. தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளடக்கம் நன்றாக இருந்தது. தற்போது அங்கு தாக்குப்பிடிப்பது அப்படி என்ன சிரமமாக இருக்கப் போகிறது. விருந்தாளியாக செல்கிறேன்.

ஒன்னுமே தகுதி இல்லாத இடத்திற்கு திட்டமே இல்லாமல் நான் ஏன் செல்ல வேண்டும். நிகழ்ச்சிக் குழுவினருடனான ஒப்பந்த அடிப்படைக்காகச் செல்கிறேன். அவ்வளவு தான் என்று தெரிவித்துள்ளார் வனிதா.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஓட்டு போவதில் குளறுபடி நடக்கிறது என்று பார்வையாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் அது மோசடி தான் என்று வனிதா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,294.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.