Show all

செம்பருத்தி, சின்னத்திரை தொடர் செம்பாதான்- போட்டாரய்யா ஒரு போடு

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தான் சையது அசாருதீனைக் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார் ராஜா ராணி சின்னத்திரை தொடரில் நடித்து வரும் ஆல்யா மானசா. ராஜா ராணி சின்னத்திரை தொடரில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம். 

சின்னத்திரை தொடரையும் தாண்டி அவரை இன்ஸ்டாகிராமில் பலர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதற்கு முதன்மைக் காரணம், அடிக்கடி அவர் வெளியிட்டு வரும் குரலுக்குநடிப்பு காணொளிகள்தான். தற்போது அவரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், ராஜா ராணி சின்னத்திரை தொடரில்; தன்னுடன் நடித்து வரும் சஞ்சீவ் கார்த்திக்கும், ஆல்யாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி செய்வது போல், இருவரும் இணைந்து வெளியில் சுற்றினார்கள். சேர்ந்து குரலுக்குநடிப்பு காணொளி எடுத்து வெளியிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜா ராணி படத்தில் நஸ்ரியா பேசும் குரலை குரலுக்குநடிப்பு காணொளி வெளியிட்டிருந்தார். அதில், சையிக்காக, என அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த 'சை' யார் எனக் கேட்டால், அது சையது அசாரூதின் புகாரி என்கிறாராம் ஆல்யா. 

இது என்னடா இது இந்தப் பொண்ணு இப்படி ஆயிருச்சேன்னு பார்த்தா- சையது அசாரூதின் புகாரி என்பது ராஜா ராணியில் சின்னய்யாவாக நடிக்கும் சஞ்சீவ் கார்த்தியின் உண்மையான பெயராம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,974.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.