Show all

அடுத்த மாதத்தில் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

பொன்னியின் செல்வன் படத்திற்கான நடிகை, நடிகர்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்த மாதத்தில் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புகழ் இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கான நடிகை, நடிகர்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவன் வேடத்தில் கார்த்தி, இராசராச சோழன் வேடத்தில் ஜெயம் ரவி, பூங்குழலி வேடத்தில் நயன்தாரா, சுந்தரசோழன் வேடத்தில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் வேடத்தில் விக்ரம், குந்தவை வேடத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் பார்த்திபன், ஜெயராம், திரிசா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முதன்மை வேடத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கவுள்ளார். ஏற்கனவே ஜெயம் ரவி, ஆரவ் இருவரும் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆரவ் எந்த வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,331.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.