Show all

'சந்திப்புக்குறி எனக்குந்தான்' என்று பாலியல் பற்றி பேசுவது அபத்தமாக உள்ளது: ஹிந்தி பிக்பாஸ்11 வெற்றியாளர் ஷில்பா ஷிண்டே

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா முழுவதும் அளாளுக்கு 'எனக்குந்தான்' பதிவு வெளியிடுவது சூடுபிடித்துள்ள நிலையில், இதில் ஒரு வேடிக்கை: நடிகை கஸ்தூரியால் தான் பாதிக்கப் பட்டதாக ஒரு ஆடவர் பதிவிட, கஸ்தூரி வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார். இவ்வாறன நிலையில், திரைப்படத்தில் பாலியல் பலாத்காரம் இல்லை என்றும் எது நடப்பினும் இருதரப்பினரின் சம்மதத்துடன் தான் நடக்கிறது என்றும் நடிகை ஷில்பா ஷிண்டே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

'சந்திப்புக்குறி எனக்குந்தான்' என்று பாலியல் பற்றி பேசுவது அபத்தமாக உள்ளது. பாலியல் தொல்லையில் சிக்கினால் அப்போதே சொல்ல வேண்டும். பல ஆண்டுகள் கழித்து தாமதமாக குரல் கொடுத்தால் யாரும் கேட்கப்போவது இல்லை. எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. ஆனால் திரைப்பட துறையின் பெயரை கெடுப்பதுபோல் பேசுகிறார்கள்.

திரைப்பட துறை மோசமானது அல்ல. நல்ல துறைதான். திரைப்பட துறையில் இருக்கும் எல்லோரும் மோசமானவர்கள் இல்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. திரைப்படத்தில் பாலியல் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நடப்பது எல்லாம் இருதரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்கிறது.

தவறு என்று தெரிந்தால் உடனே விலகிவிட வேண்டும் அதை விட்டு காலங்கடந்து புகார் தெரிவிப்பது முறையல்ல. என்று ஷில்பா ஷிண்டே கூறியுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,942.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.