Show all

மீனவர் பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், ஐ.நா அவையில் புகார்: இளங்கோ.

கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்தால் ரூ.15கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்புக்கு தேசிய மீனவர் பேரவைத்தலைவர் மா. இளங்கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் 5 மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். இதை நிறுத்துமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தாலும் பலனில்லை. தற்போது 86 மீனவர்கள் விடுவிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் 38, காரைக்காலின் 8 படகுகள் என மொத்தம் 46 படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றைத் தமிழக முதல்வர், பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கோரிக்கைகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் ரூ.30 கோடி மதிப்புள்ள படகுகள் பாழாகி வருகின்றன. உடனே அப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை கடல் பகுதியில் தாண்டி மீன்பிடித்தால் ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்படும் என்ற அந்நாட்டு அரசு சட்டத்திருத்தம் கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசு இதுபோன்ற முடிவுகளைக் கைவிட வேண்டும்.

இரு நாட்டு மீனவர்கள் மீது அபராதம் விதித்தால் விபரீத விளைவுகள் தான் ஏற்படும். எனவே அபராதம் விதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு உடனே கைவிட வேண்டும். இப்பிரச்சனைத் தொடர்பாக 6 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜைச் சந்திக்க உள்ளோம். வாய்ப்புக் கிடைத்தால் பிரதமர் மோடியையும் சந்தித்து முறையிடுவோம். இப்பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், ஐக்கியநாடுகள் சபையில் புகார் தரப்படும் என்றார் இளங்கோ.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.