Show all

சித்திரமே சொல்லடி புதியபடம்! மூன்று கதைத்தலைவிகளுடன், நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் அசத்தலில்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நகைச்சுவை நடிகர் கூல்சுரேஷ் 'சித்திரமே சொல்லடி' படத்தில் கதைத்தலைவனாக களமிறங்கியுள்ளார். கோபிகா நாயர் உள்ளிட்ட மூன்றுபேர்கள் கதைத்தலைவிகளாம். இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி தேவி, அப்சர் மற்றும் பெரேரா ஆகியோர் நடித்துள்ளனர்.  ஒளிப்பதிவு மகி பாலன்.  இசை ஆதிஷ் உத்ரியன். இந்தப்படத்தை எம்.ஜி.எம் புரொடக்ஷன் சார்பில் கௌரி சங்கர் தயாரித்து இயக்குகிறார். துப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இந்தப் படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், கிண்டல் செய்பவர்களிடமிருந்தும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தப் படம் உணர்த்தும் என்;று தெரிவிக்கிறார் இயக்குநர். 
முதல்முறையாக காவல் துறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்கிறார் கூல்சுரேஷ்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,971.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.