Show all

யோகிபாபு காட்டில் குளிரும், கொட்டும் மழையும்!

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ளார் யோகிபாபு. அண்மையில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களிலும் நடித்து மிகவும் வேலையாக உள்ளார். இந்த நிலையில் தற்போது யோகிபாபு இரண்டு படங்களில் கதைத்தலைவனாகவும் நடித்து வருகிறார்.

யோகிபாபு கதைத்தலைவனாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'தர்மபிரபு.' தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் யோகிபாபுவும் யாசிகாவும் பாடல் ஒன்றில் நடனம் ஆடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முத்துக்குமரன் இந்தப் படத்தின் இயக்குநர். ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவாளராகவும் சான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும் உள்ளனர். இந்தப் படத்தில் யோகி பாபு நடிப்பதோடு வசனமும் எழுதுகிறார்

அதேபோல் யோகிபாபு கதைத்தலைவனாக நடித்து வரும் 'ஜோம்பி' என்ற படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,044.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.