Show all

வத்திக்குச்சி திலீபன் பார்வையில் யோகிபாபு!

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குத்தூசி படத்தில் கதைத்தலைவனாக நடித்துள்ள திலீபன், யோகி பாபு பற்றி பேசும் போது, அடுத்தவங்க மேல அக்கறையோடு இருப்பது தான் யோகி பாபுவிடம் தனக்கு ரொம்பப் பிடித்தது என்று கூறினார். 

வத்திக்குச்சி படத்தில் கதைத்தலைவனாக நடித்த திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார். இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குத்தூசி. இயற்கை வேளாண்மை பற்றிய இந்த படத்தில் யோகி பாபுவுக்கு முதன்மையான கதைபாத்திரம். யோகி பாபு தொடக்க காலத்தில் நடித்த இந்த படம் இப்போது தான் வெளியாகி இருக்கிறது.

யோகி பாபு பற்றி திலீபன் கூறும்போது, அவர் ஒரு தீவிர முருக பக்தர். எல்லோர் மீதும் அதிக அக்கறை எடுத்துக்குவார். எல்லோரும் பரபரப்பா ஓடிக்கிட்டு இருந்தாலும், யாருக்கு என்ன தேவைன்னு கண்டுபிடிச்சு, அவங்களுக்குப் பண்ணணும்னு நினைப்பார். வேலையாக இருக்கிற ஒருத்தருக்கு தன்னுடைய வேலைகளைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கும். ஆனா, யோகி பாபு அடுத்தவங்க மேல அக்கறை எடுத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,044.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.