Show all

யார் அந்தக் குழந்தை! குழந்தையை பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு மாதம் ரூ.1,50,000 சம்பளம்; அதுவும் நம்ம இந்தியாவில்

25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வடக்கத்திய நடிகை கரீனா கபூர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இந்தக் குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர், பெண் ஒருவரை நியமித்து உள்ளார். அந்தப் பெண்ணுக்கு மாதம் ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சம்பளம் கொடுக்கிறார்.

குழந்தையைக் கவனித்துக்கொள்ள இந்தப் பெண்ணை தேர்வு செய்யும் முன்பு பெரிய அளவில் நேர்முக தேர்வு நடத்தினாராம் கரீனா கபூர். இதில் நிறைய குழந்தை வளர்ப்பு நிபுணர்களெல்லாம் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு, குழந்தையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கரீனா வழங்கியுள்ளார். அவருக்கு மாதத்துக்கு ரூ.1½ லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,937.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.