வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக கருத்துப்பரப்புதல்
மேற்கொள்வேன் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மதுரை
ஆதீனம். அப்போது அவர் கூறியதாவது, மதுரை ஆதீனம் திருஞான சம்பந்தரால்
தோற்றுவிக்கப்பட்ட பழமையான ஆதீனம். எல்லோரும் ஆண்டவனுடைய குழந்தைகள் என்ற அடிப்படையில் எந்த சாதியினராக
இருந்தாலும், அனைவருமே இறைவனின் அருளால் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதையே மதுரை ஆதீனம்
மூலமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம் என்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அரசியல் நிலவரம் குறித்து
எதுவும் பேசப்படவில்லை. சன்னிதானத்தின் ஆசிர்வாதம் தனக்கு எப்போதும் வேண்டும் என்று
அவர் கேட்டுக் கொண்டார். சன்னிதானத்தின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் அம்மா என்று
ஆசிர்வதித்தேன் என்று பதிலளித்தார். அதிமுகவுக்காக தேர்தல் கருத்துப்பரப்புதல் மேற்கொள்ளப் போவதாகக்
கூறப்படுகிறதே அதுபற்றி? கருத்துப்பரப்புதல் செய்வோம். தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார் மதுரை
ஆதீனம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.