Show all

இணையத்தில் பரபரப்பாக பார்க்கப்படும் காணொளி! நடிகர் துனியாவிஜய்யை அவமானத்தில் தலைகுனிய வைத்துள்ளது

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். நடிகர் துனியா விஜய்க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விளம்பர நடிகை கீர்த்தி கவுடாவுடன் காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடனேயே வசித்து வருகிறார். 2 மனைவிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

அண்மையில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு மகளுடன் நேரில் சென்று முதல் மனைவி நாகரத்னா, வீட்டுக்குள் புகுந்து செருப்பால் தாக்கியது கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளி தற்போது இணையத்தில் ஒரு குறும்படம் போல அனைவராலும் விரும்பி பார்க்கப் பட்டு வருகிறது.
 
இதுகுறித்து இருவரும் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த நிலையில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு சென்று நாகரத்னா தாக்கும் காணொளி இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தக் காணொளியை ஆதாரமாக வைத்து நாகரத்னாவிடம் விசாரிக்க காவல்துறையினர் சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துனியா விஜய் 2-வது மனைவியுடன் நிலையத்துக்கு வந்து நாகரத்னா தவறுக்காக மகள்கள் பாதிக்க கூடாது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தலைமறைவான முதல் மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கணொளி வெளியான காரணத்தால நடிகர் துனியா விஜய்; அவமானத்தில் இருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,957.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.