Show all

தமிழ் திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது! அது தொடர்ந்திட, முழு ஒத்துழைப்பு அளிக்க நடிகர் விசால் உத்தரவாதம்

29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறோம். பாலியல் தொல்லைகளை நடிகைகள் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பெண்கள் தாமதிக்காமல் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் விரைந்து நடவடிக்கை எடுப்போம்.

நடிகை அமலாபால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை எங்களிடம் சொன்னதும், நானும் கார்த்தியும் மலேசியாவுக்கு தொடர்பு கொண்டு பேசினோம். பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்தோம். இதுபோல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் உடனே எங்களிடம் சொல்ல வேண்டும். படப்பிடிப்புகளில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். 

நாங்கள், 'எனக்குந்தான்' என்ற தலைப்பில் பதிவிடப்படும் பாதிக்கப் பட்டோர் கருத்துக்கு ஆதரவாக இருப்போம். பெண்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம் அவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்தும் மகிழ்ச்சியடைவோம். தமிழ் திரையுலகில் பாலியல் கொடுமை பற்றிய விவகாரம் குறித்து விசாரிக்கவும் நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் 3 பேர் குழு அமைக்கப்படும். இவ்வாறு விசால் அறிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.