Show all

மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த போப் ஆண்டவர் பிரான்சிஸ்

மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளை ஆளுகிறவர்களின் மனசாட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன் என வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று கூறியுள்ளார்.

“சமூகத்தின் சட்டப்படியான தற்காப்புக்கும்கூட, மரண தண்டனையை நிறைவேற்ற பரவலாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்

“அனைத்து கிறிஸ்தவர்களும், நல்லெண்ணம் கொண்டவர்களும் மரண தண்டனையை ஒழிப்பதற்காக பாடுபட வேண்டும். அப்போது தான் தங்கள் சுதந்திரத்தை இழந்த மக்களின் கண்ணியத்தை மதிப்பதாக அர்த்தம்” எனவும் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.