ஜெயம் ரவியின் மிருதன் படம், முதல்நாளன்று அதிக
வசூலை அள்ளியுள்ளது. இதுபற்றி சுட்டுரையில் கருத்து தெரிவித்த ஜெயம்
ரவி, அனைவருக்கும் நன்றி. என் படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம், மிருதன்
என்று சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜனும் தன்னுடைய
சுட்டுரை பக்கத்தில், ஜெயம் ரவியின் அதிகளவிலான முதல் நாள் வசூல் இது. மித்ரனின் வசூல் தனி ஒருவன் வசூலைத் தாண்டிவிட்டது. வசூல் விவரங்களை
விரைவில் வெளியிடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். படத்துக்குச் சாதகமான விமரிசனங்கள் வெளிவந்துள்ளதால்,
2016-லும் ஜெயம் ரவியின் வெற்றி ராஜ்ஜியம் தொடர்கிறது என்றே கூறமுடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.