Show all

நடிகை காஜல்அகர்வால் எழுபது நிமிடங்கள் பத்து கிமீ தூரம் தொடர்ந்து ஓடியது ஏன்!

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மும்பையில் சுமார் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்;ட ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப் பட்டு வருகிறது. இந்தப் போட்டியின் இலக்கு தூரம் 21கிமீட்டர்கள். அடுத்த ஆண்டு இந்தப் போட்டியில் காஜல்அகர்வால் கலந்து கொள்ளப் போகிறாராம். 

அதற்கு முன்னோட்டமாக இந்த ஆண்டே அந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஓடினார். இதில் சுமார் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் நடிகை காஜல் அகர்வால் 10 கிமீ தூரம் வரை கலந்து கொண்டார். அவர் இந்த 10 கிமீ தூரத்தை வெறும் 70 நிமிடங்களில் ஓடி கடந்துள்ளார். இதைவிட முதன்மையான வேலை நமக்கு என்ன இருக்கிறது? அடுத்த ஆண்டு காஜல்அகர்வால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.