Show all

ரஜினி மலேசிய வருகை: தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு.

கபாலி, படப்பிடிப்புக்காக ரஜினி மலேசியா சென்றுள்ளார். இதனால் மலேசிய தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை விமானம் மூலமாக மாலை 5.45 மணிக்கு மலேசியா சென்றடைந்தார் ரஜினி. அவருடன் படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் சென்றார். படப்பிடிப்புக்குழுவினர் கடந்த வாரமே மலேசியா சென்றுவிட்டார்கள்.

ரஜினியின் வருகையை அறிந்து செய்தியாளர்களும் ரசிகர்களும் விமான நிலையத்தில் கூடினார்கள். செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, நாளை முறையாகச் சந்தித்துப் பேசுகிறேன் என்று தெரிவித்தார். புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதித்தார்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தை ரஞ்சித் இயக்குகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். கிஷோர், தினேஷ், கலையரசன், தன்ஷிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ரஜினி மலேசியா சென்றது குறித்து சமூகவலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அவருடைய புகைப்படங்கள் அதிகமாகப் பகிரப்பட்டன.

‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் சில வாரங்கள் நடக்கிறது. மலாக்காவில் படப்பிடிப்பு நடைபெறுவதால் ரஜினி - மலாக்கா கவர்னர் சந்திப்பும் நடைபெற்றுள்ளது.

மலேசியாவில் முடிந்தபிறகு தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மொத்தம் 60 நாள்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்குப் பிறகே ரஜினி சென்னை திரும்புவார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.