Show all

நடிகர் சிவகார்த்திகேயனைச் சிலர் தாக்கியதாகத் தகவல் பரவியது.

மதுரையில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த நடிகர் சிவகார்த்திகேயனைச் சிலர் தாக்கியதாகத் தகவல் பரவியது. இது சினிமா துறையினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

நடிகர் கமலஹாசனின் ரசிகர்கள்தான் அவரை தாக்கினர் என்றும் தகவல் பரவியது.

அவரை சிலர் தாக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டு, சமூக வலைய தளங்களில் வைரலாக பரவியது. இந்தச் சம்பவம் நடந்து, ஒரு சில மணி நேரங்களில், சென்னை விமான நிலையைத்தில், கமலஹாசன்,

என் ரசிகர்கள் அவரை தாக்கவில்லை. இப்போதுதான் அவரிடம் பேசிவட்டு வருகிறேன் என்று கூறினார்.

சிவகார்த்திகேயனும் நிருபர்களிடம் அது ஒரு சின்ன பிரச்சனை. எனக்கு ஒன்றும் இல்லை. இதோ உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்காக இவ்வளவு தூரம் நீங்கள் வந்ததற்கு நன்றி என்று கூறி காரில் ஏறி சென்று விட்டார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு ஒன்றும் இல்லை. உங்களின் ஆசிர்வாதங்களுடன் நான் நலமாக இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த எல்ல நல்ல இதயங்களுக்கும் என் நன்றி. உங்கள் அன்பு என்னை பலப்படுத்துகிறது. உங்களை நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.