Show all

எழுபது ஆண்டுகளாக எதிர்பார்க்கப் படுகிறது! ரஜனி தொடங்கும் கட்சி போல ஆகிவிட்டது பொன்னியின் செல்வன் திரைப்படம்

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போதும் கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் அதிக விற்பனை நூல் பட்டியலில் இருந்தது. 

இதைப்படமாக்க முயன்று எம்.ஜி.ஆர் இரண்டு முறைத் தோற்றுள்ளார். அதன் பின் மணிரத்னம் சில முறை முயன்று வரவு செலவுத் திட்டம் காரணமாக கிடப்பில் போட்டார். ஆனால், மணிரத்னத்திற்கு இம்முறை எல்லாம் கூடி வந்து படவேலைகளை மும்முரமாக தொடங்கி கதை வேலைகளில் இறங்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், அமிதாப் பச்சன், ஐசுவர்யா ராய் ஆகியோர் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் வரவு செலவுத் திட்டம் பல மடங்கு உயர்ந்து வருவதால் திட்டமிட்ட வரவு செலவுத் திட்டத்திற்குள் படத்தை முடிப்பதற்காக நடிகர்களிடம் மொத்தமாக 6 மாதங்கள் தொடர்ந்து நடித்துத்தர ஒப்புதல்  கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த 6 மாதமும் எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் மணிரத்னம் கேட்கும் போது நடித்துக் கொடுக்க வேண்டுமாம். மணிரத்னத்திற்காக இந்த நிபந்தனையை அனைவரும் ஒத்துக்கொண்டாலும் 6 மாதத்தில் 4 படங்களில் நடித்து முடிக்கும் விஜய் சேதுபதி சற்று யோசித்து பின்பு படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போது அவருக்குப் பதிலாக கார்த்தியிடம் பேசிவருவதாகக் கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.