ரஜினிகாந்தின், எந்திரன்-2 பட வேலைகள் தொடங்கியுள்ளன. இதன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்தார். இரண்டாம் பாகத்தில் வேறு நடிகையைத் தேர்வு செய்கின்றனர். இரண்டு கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியுடன் நடிக்க நடிகைகள் மத்தியில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் ஜோடியாக ‘சந்திரமுகி’யில் நயன்தாராவும் ‘சிவாஜி’ படத்தில் ஸ்ரேயாவும் ‘கோச்சடையானில்’ தீபிகா படுகோனேயும் ‘லிங்கா’ படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா ஆகியோரும் நடித்துள்ளனர். ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே நடித்துக்கொண்டு இருக்கிறார். ‘எந்திரன்-2’ படத்தில் நடிக்க அவருடன் ஏற்கனவே ஜோடி சேர்ந்த பல நடிகைகள் முயற்சிக்கின்றனர். தூதும் அனுப்புகிறார்கள். ஒரு கதாநாயகி வேடத்துக்கு எமிஜாக்சனை ஷங்கர் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. இன்னொரு கதாநாயகி தேர்வு நடக்கிறது, இந்த நிலையில் திரிஷாவும் ரஜினியுடன் ஜோடி சேர விருப்பம் தெரிவித்துள்ளார். ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.இந்த நிலையில் நாளை முதல் ’எந்திரன்-2’ படப்பிடிப்பு தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தார். அதன்படி இன்று ’எந்திரன்-2’ படப்பிடிப்பு தொடங்கியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.