Show all

எல்லைக்கடவு வீட்டிலேயே வைத்து விட்டு விமான நிலையம் வந்த ரஜினி

கபாலி இறுதி கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் மலேசிய செல்ல வேண்டியிருந்தது. அதற்காக அவர் நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.

 

விமான நிலையம் வந்த பிறகுதான் எல்லைக்கடவு வீட்டிலேயே வைத்து விட்டு வந்தது ரஜினிக்கு தெரியவந்தது. இதனால் உடனடியாக வீட்டிற்கு பேசியில் அழைத்து   ரஜினி, எல்லைக்கடவைக் கொடுத்து அனுப்பும் படி கூறியுள்ளார். காலை நேரத்தில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்  என உணர்ந்த ரஜினி, எல்லைக்கடவு எடுத்து வருபவரை மோட்டார் சைக்கிளில் வரச் சொல்லுங்கள் என்று கூறினார்.

 

இதனால் விமான நிலையத்தின் வரவேற்பரையில் ரஜினிகாந்த் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதேபோல், ஒருவர் மோட்டர் சைக்கிளில் விமான நிலையம் வந்து ரஜினியிடம்  எல்லைக்கடவு கொடுத்தார்.

 

ரஜினி செல்ல வேண்டிய விமானமும் அரை மணி நேரம் தாமதமாக வர, 11.45 மணியளவில் அவர் மலேசியா புறப்பட்டுச் சென்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.