Show all

அஞ்சல் துறை சார்பில் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் சென்னையில் வௌ;ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சேவையைத் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 10.6 லட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் வௌ;ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது திட்டத்தின்கீழ் கணக்குத் தொடங்கிய சிறுவர்களுக்கு கணக்குப் புத்தகங்களையும் மரக்கன்றுகளையும் அவர் வழங்கினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.