02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் இளைஞர்களைக் கொள்ளை கொண்ட நடிகை பிரியா வாரியார் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம், சிறிதேவி பங்களா. இந்தப் படத்தை பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு நடிகை சிறிதேவி துபாயில் குளியல் தொட்டியில் மூச்சுதிணறி இறந்துபோனார் என்று சொல்லப் படுகிறது. தற்போது, வெளியான முன்னோட்டத்தில் நடிகை பிரியா வாரியார் குளியல் தொட்டியில் இறந்துகிடப்பது போன்ற காட்சி உள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறிதேவியின் கணவர் போனி கபூர், சிறிதேவி பங்களா இயக்குநருக்கு சட்டப்படி கவனஅறிக்கை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் படத்தில் சிறிதேவி என்பது பொதுவான பெயர் என்றும் இதனை நான் முறைப்படி சந்திப்பேன் என இயக்குநர் கூறியுள்ளார். ஒரு நிமிடமும் 49 வினாடியும் ஓடும் சிறிதேவி பங்களா முன்னோட்டத்தில் பிரியா வாரியர் சிறிதேவியை பிரதிபலிக்கிறார். முன்னோட்ட முடிவில், சிறிதேவியின் மர்ம மரணம் குறித்த குறிப்புகளைக் காட்டும் ஒரு குளியல் தொட்டியும் காட்டப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,034.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.