Show all

இன்று பூசை! சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிற ‘மருத்துவர்’ திரைபடம்

மருத்துவர்’ படத்தில், தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் கதைத்தலைவியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகத் தெரியவருகிறது.

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மருத்துவர் திரைப்படத்திற்கான பூசை இன்று நடைபெற்றது. சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில்,  (கோலமாவுகோகிலா இயக்குனர்) அனிருத் இசையில் உருவாகவிருக்கிறது மருத்துவர் திரைப்படம். 

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு இருப்பதாகவும், இந்த படத்தை முடித்த பின்னரே அவர் ‘மருத்துவர்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது

நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படத்தில் வேலையாகி நடித்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில், அண்மையில் வெளிவந்த ‘நம்ப வீட்டு பிள்ளை’ திரைப்படம் வெளியாகி சிறப்பான வெற்றி பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்து வந்த, ‘கதாநாயகன்’ திரைப்படம், படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியீடு ஆக உள்ளது. இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு கதைத்தலைவியாக, கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்தே இன்று பூசை போடப்பட்ட நெல்சன் திலீப் இயக்க உள்ள ‘மருத்துவர்’ படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். 

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில், தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் கதைத்தலைவியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தத் தகவலை உறுதி செய்யும் விதமாக படக்குழுவினர், தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,358.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.