சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின், படமுன்னோட்டத் துண்டு, நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதுபற்றி கவிஞர் தாமரை, தன் முகநூலில் பதிவு செய்ததாவது: திசம்பர்31 பின்மாலை, கௌதமிடமிருந்து திடீர் அழைப்பு. ஆதிகாலை, அச்சம் என்பது மடமையடா பட முன்னோட்டத் துண்டு வெளியிட இருப்பதாக.... அவசரமாகக் கிளம்ப வேண்டியதாயிற்று என் பாடல் வரிகள் சிலவற்றோடு முன்னோட்டம் ஆயத்தப் பட்டது. கொஞ்சம் பாடல் பதிவும் செய்தோம். குறித்தபடி புத்தாண்டு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. சென்னையில் முதல்முறையாக புத்தாண்டு நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே இருந்தேன். திரும்பி வரும்போது கும்பல் கும்பலாக இளைஞர் கூட்டமும் கூச்சலும்..... அச்சமாக இருந்தது. அனைவரும் வேலை பரபரப்பில் இருந்ததால் புகைப்படம் கூட எடுக்கவில்லை. முழுப்பாடல், இசைவெளியீட்டுக்குப் பிறகு. இப்போது ரசிகர்களுக்காக சில வரிகள் மட்டும். ஏனோ வானிலை மாறுதே... மணித்துளி போகுதே... மார்பின் வேகம் கூடுதே... மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே..... கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்.... விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்.... இமை மூடிடு என்றேன்.... நகரும் நொடிகள்..... கசையடி போலே முதுகின் மேலே விழுவதினாலே... வரிவரிக் கவிதை தள்ளிப் போகாதே.... எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே.... இருவர் இதழும் மலர் எனும் முள்தானே........
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.